நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருட்கள் வாங்குவதற்காக மத்திய அரசு  பி எம் கிஷான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ரூபாய் மூன்று  தவணையாக ரூ.2000 வீதம் மொத்தம் வருடத்திற்கு 6000 ரூபாய் உதவித்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு 6000 என்ற தொகை பற்றாக்குறையாக இருப்பதாகவும் இதனை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் உதவித்தொகையை  6000 இலிருந்து வருடத்திற்கு 9000 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் 15 வது தவணைப்  பணம்  வெளியாவதற்கு முன்னதாக வெளியாகலாம் என்று கூறப்படுகிறது சரியாக முடித்திருக்க வேண்டும் எனவும்.