மத்திய அரசு விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகின்றது . இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகமான விவசாயிகள் இருக்கும் நிலையில் குறைந்த அளவு விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 20 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் 1.86 கோடி, குஜராத்தில் 45 லட்சம் என  அதிகமான விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.