நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது..இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. என் நிலையில் பிரதமர் கிஷான் திட்டத்தின் 14 வது தவணை ஜூலை 27ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாதம் 27ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சிகரில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிதியை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது