நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பௌலின், பேட்டிங் என அனைத்திலுமே சிறப்பாக விளையாடி வரும் நிலையில் ஆறு போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் பெற்றுள்ளது .இந்த வருடம் சென்னை அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார் அணியில் புதிதாக இணைந்திருக்கும் முஸ்தபிஸ்சர் ரகுமான்.

பங்களாதேஷ் அணியை சேர்ந்த இவர் ஐந்து போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அவரை பெரிதாக சென்னை அணியானது நம்பி இருக்கிறது. இந்த நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .அதாவது மே மூன்றாம் தேதி தொடங்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தேசிய அணிக்கான முஸ்தபிசுர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ள. இதற்கு காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுகிறார்.