பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு சமீபத்தில் விமானத்தில் கசப்பான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதாவது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ ஊழியர்கள் தன்னிடம் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், சேவை சரியாக இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ‘இண்டிகோ’ நிறுவனம் .. ‘மேடம்.. இந்த சம்பவம் குறித்து அறிந்து நாங்கள் வருந்துகிறோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய பிறகு  நாங்கள் உங்களைத் தொடர்புகொள்கிறோம்’ என்று  கூறியுள்ளது.