இஸ்தான்புல் பகுதியில் இருந்து சைப்ரஸ் செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் சிகரெட் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது விமானத்தில் நீல நிற புர்கா மற்றும் கண்ணாடி அணிந்து ஒரு பெண் ஏறினார். இவர் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு திடீரென சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார். இதனை அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் தட்டிக் கேட்ட போதிலும் அவர் அதனை மறைக்கும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

விமான ஊழியர்கள் அந்த பெண்ணின் கையில் இருந்த சிகரெட் லைட்டரை புடிங்கிய போது அவர் இருக்கையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார். விமான ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போதே அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.