
திருமண ஊர்வலங்கள் வழக்கமாக வீதிகளில் நடக்கும். ஆனால் பீகாரில் நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம் அரசாங்க பாலத்தில் நடந்து, இசைக்குழுவுடன் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு பெண் இசைக்குழுவின் தாளத்திற்கு நடனமாடும் காட்சி மற்றும் பாலத்தின் மீது திருமண விருந்தினர்கள் அமர்ந்திருப்பது தெளிவாகக் தெரிகிறது. இதனால் சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன.
View this post on Instagram
இந்த வீடியோ, @desi.crap என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. ஏராளமானோர் இதற்கான கருத்துகளில் பீகாரை கேலி செய்வதுடன், ‘இது பீகார்! இங்கே எல்லாம் சாத்தியம்!’ என விளையாட்டாக தெரிவித்துள்ளனர்.
ஒருவர், “இந்தப் பாலம் இன்னும் திருடப்படவில்லை என்பதற்கே நன்றி சொல்ல வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார். இதுபோல பலரும் சமூக ஊடகங்களில் கலகலப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு பக்கத்தில், சிலர் இந்த சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஒரு அரசாங்க பாலத்தில் திருமண ஊர்வலத்தை நிறுத்தி, இசைக்குழு ஏற்பாடு செய்வது தவறானது என்றும், இது மற்றவர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறுகின்றனர்.