கடந்த 25 ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் படத்தில் நடித்த போது சீமான் தன்னை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி முன்னதாக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக விஜயலட்சுமிக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் தற்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்காக அவரை சற்று முன் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் பரிசோதனை முடிவுக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.