திமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிக்கை வெளியானது. இதனிடையே விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஜயகாந்த் மறைவிற்கு எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் நல்ல திரைப்படக்கலைஞர்…. நல்ல அரசியல் தலைவர்…. நல்ல மனிதர்…. நல்ல சகோதரர்…. ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.