சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை 4.45 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணியில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் விஜயகாந்த் இறுதி சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கில் பங்கேற்க பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு தேவையான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.