நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம், பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் பெட்டியில் இடம் பெற்றுள்ளன. சென்னை தீவு தியேட்டரில் இருந்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது