சளி, இருமல் காரணமாக கடந்த 18ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. உடல்நலம் தேறியதால் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதாகவும், அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தொண்டர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.