இந்தியாவை சேர்ந்த ஒரு பெண் குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், சிறப்பு சொற்பொழிவு வழங்குவதற்காகவும் பாகிஸ்தான் செல்ல விசாவுக்கு இந்திய பாகிஸ்தான் தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். கடந்த மார்ச் 2022 அப்பெண் தூதரகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது அங்குள்ள ஊழியர் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் வெளி விவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து நீதி கேட்டு முறையிட்டுள்ளார். அப்பெண் கூறியிருப்பதாவது “விசா மறுக்கப்பட்டதால் தூதரகத்தை விட்டு வெளியேறும்போது, என்னை ஆசிப் என அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு அதிகாரி உதவ முன் வந்தார்.

தன்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று காத்திருக்கச் சொன்னார்கள். அப்போது தான் ஆசிப் என்னிடம் எனது தொழில், திருமணநிலை, பாலியல் ஆசைகள் மற்றும் அவற்றை நிறைவேற்ற என்ன செய்கிறீர்கள் என கேட்டார். மேலும் அதிகாரி அவரது வக்கிரப் பேச்சுகளை தொடர்ந்தார். இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எனது மதத்தை பற்றியும் கேட்டார்”  என்று கூறி இருந்தார்.