
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கீதா பூஷன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜிதேந்திரா(45) என்ற மகன் இருந்துள்ளார். புத்தாண்டு தினத்தில் அவர்களது வீடு பூட்டி கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கேபிள் ஒயரால் கழுத்தை நெரித்து ஜிதேந்திராவும் அவரது தாய் கீதாவும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. டிசம்பர் 31-ஆம் தேதி ஜிதேந்திரா 19 வயதான சுபம் நாராயணன், மங்கேஷ் ஆகியோரை புத்தாண்டு கொண்டாட வீட்டிற்கு அழைத்துள்ளார். மூவரும் இணைந்து மது குடித்தனர். இதனை அடுத்து ஜிதேந்திரா அந்த வாலிபர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த வாலிபர்கள் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதனைப் பார்த்த கீதா பூசனையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த பணம், நகை, மொபைல் போன்களை எடுத்து விட்டு தப்பி சென்றனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதியானது.