ஜெர்மனியில் கடந்த 6 மாதமாக “4 நாள் வேலை வாரம்” என்ற முறையில் ஒரு புதிய சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொழில்நுட்பம், நிதி, உற்பத்தி போன்ற துறைகளில் இயங்கும் 45 நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. இதில், ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் இல்லாமல் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தாலும், அவர்களது ஊதியம் முழுமையாக வழங்கப்பட்டது.

இந்த முயற்சியின் முடிவில், 73% நிறுவனங்கள் இதனை நிரந்தரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளன. குறைந்த வேலை நேரத்தில் கூடவே, வேலை தரமும் நிறுவனங்களின் உற்பத்தி திறனும் மேம்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம், ஊழியர்கள் மன அழுத்தம் குறைதல், நல்ல தூக்கம், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் போன்ற பல நன்மைகளை அனுபவித்துள்ளனர். ஆய்வில், 90% ஊழியர்கள் தங்கள் நலவாழ்வு மேம்பட்டதாகவும், 83% பேர் இந்த 4 நாள் வேலை முறையை தொடர்ந்து விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், நிறுவனங்களும் இந்த குறைந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தி, செயல்திறனை அதிகரித்துள்ளன.

இச்சோதனை முழுமையாக வெற்றியடைந்தாலும், சில நிறுவனங்கள் பொருளாதார சுமை காரணமாக தொடர முடியாமல் விலகியுள்ளன. ஆனால், ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இதே மாதிரி திட்டங்கள் பரிசோதிக்கபட்டு வருகின்றன.

தற்போது உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 4 நாள் வேலை வாரம் முறைமையை சோதனை செய்துள்ளன. இது எதிர்கால வேலை முறைமைக்கு புதிய மாற்றத்தை உருவாக்கும் என நிபுணர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.