
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள் வீட்டில் தங்கினர். இந்நிலையில் நேற்று இரவு அந்த வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை ஜன்னல் வழியாக பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் அந்த இளம் பெண் கீழே பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இருவரது உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் பின்னர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ்மற்றும் அபிநயா ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் ப்ராஜெக்ட் வேலைக்காக சென்னைக்கு செல்வதாக இருவரும் வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் தங்கிய நிலையில உல்லாசமாக இருந்துள்ளனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக் கொண்டு இந்த வீட்டில் தங்கி இருந்தனர்.
அதே நேரத்தில் கடந்த 10 நாட்களாக இருவருக்குள்ளும் தகராறும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் இவர்கள் உல்லாசமாக இருந்த நிலையில் பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஆகாஷ் அபிநயாவை சரமாரியாக தாக்கியதில் அவர் இறந்துவிட்டார். இதனால் பயந்து போன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் இருவருக்கும் எதற்காக சண்டை வந்தது என்பதற்கான காரணம் தெரியாத நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது மரணம் குறித்து இருவீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தங்கள் பிள்ளைகளின் மரண செய்தியை கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடிக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.