தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள சாலையில் மதுபோதையில் ஒரு நபர் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனாலும் அவர் மதுபோதையில் அங்கிருந்து செல்லாமல் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த நபரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று சாலையின் ஓரமாக அமர வைத்துள்ளனர்.

ஆனாலும் அவர் எனக்கு கூடுதலாக மதுபானம் வாங்கி தந்தால் மட்டுமே செல்வேன் என்று கூறி  மீண்டும் ரகளை ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.