இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போக்குவரத்து விதிகளை அரசு கடுமையாக்கியுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் தான் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தடுப்பதற்காக பல்வேறு விதிகளை போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் இதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நான்கு ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இது இல்லையென்றால் டிராபிக் போலீஸாரால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி டிரைவர் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆர் சி எனப்படும் இந்த ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி ஆவணம் இருக்க வேண்டும். முக்கியமாக மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவை இல்லை என்றால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க நேரிடும்.