2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்து துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் அலாரம் ஒலிக்கும். இந்த புதிய விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது