வளர்ப்பு நாய் பிறரை கடித்தால் அதை வளர்ப்போருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில் நாய் ஈடுபட்டால் அதனை வளர்க்கும் நபருக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்க பாரதீய நியாய சங்கீத சட்டத்தின் 291 வது பிரிவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.