நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடந்த நான்காம் தேதி மர்ம முறையில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், காங்கிரஸ் நிர்வாகிகளான கேவி தங்கபாலு மற்றும் எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட பல பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.

பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் தொடர்பாக அவர்களிடம் இருந்து தனக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக கேவி தங்கபாலு என்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனசிங் கொலை செய்யப்பட்டு அதன் பிறகு உடல் எரிக்கப்பட்ட இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.