
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்திய போது அங்கு 2 அடி உயரத்தில் 2 தண்ணீர் கேனில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது அதனைப் பார்த்த போலீசார் உடனடியாக கஞ்சா செடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்பு சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா செடிகளை வளர்த்ததால் லோகேஷை கைது செய்தனர். கைது செய்த லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.