கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதுவரை 240 பேரை காணவில்லை என்று கூறப்படுவதால் அவர்களை தேடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
