வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் செப்டம்பர் 9 முதல் புதிய கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணத்தை திருத்தி அமைத்த நிலையில் வண்டலூர் மற்றும் கிண்டி உயிரியல் பூங்காக்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் 115 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் வெளிநாட்டுனருக்கான நுழைவு கட்டணம் 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவிற்கான நுழைவு கட்டணம் 60 ரூபாயாகவும் 5 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பத்து ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.