
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து வரும் நிலையில் பூங்காவிற்கு வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.
இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.