கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் ரமணியின் மொபைல் ஆப் ஆகி இருந்ததால் ரமணியின் தாயார் லட்சுமி அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அங்கு பூட்டப்பட்டு இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமணி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அதனை கண்ட அதிர்ச்சியான அவரது தாய் தன் மகளின் கொலை குறித்து எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட ரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ரமணியின் கணவரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் தலைமறைவான அசோக் இடைக்கல் காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் ரமணி பல ஆண்களுடன் செல்வதாகவும், ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளதாகவும், அதனை மறைத்து தன்னையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறினார்.

அவரை திருத்துவதற்காக அறிவுரை கூற முற்பட்டபோது தன்னை ஆள் வைத்து கொலை  செய்வதாக மிரட்டினார். இதனால் தான் நான் ரமணியை கொன்றேன் என்று காவல்துறையினரிடம் கூறினார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டார். இந்த மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.