அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ மூலம் திருப்பி செலுத்தலாம். அதேபோல கடன் கால முடியும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே கடனை மொத்தமாக திருப்பி செலுத்த முடியும். அதற்காக சில முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.  ஒவ்வொரு மாதமும் வீட்டுக் கடன் இஎம்ஐ தொகையை செலுத்துவதை தவிர்த்து மொத்த தொகையை வங்கியில் முன்கூட்டியே செலுத்தும்போது அசல் தொகையிலிருந்து முன்கூட்டியே செலுத்தும் தொகை அளிக்கப்படும்.

இது வங்கியில் நாம் பெரும் கடன் தொகையை குறைக்கும். கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலமாக வட்டி சுமையை குறைக்கலாம். இப்படி முன்கூட்டியே செலுத்துவதால் வீட்டுக் கடனுக்கான அசல் தொகை குறைவதால் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் இஎம்ஐ தொகையும் குறைகிறது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் ஸ்கோரும்  மேம்படும். கடனை முன்கூட்டியே செலுத்துவது கடனை திருப்பி செலுத்துவதற்கான முழு திறனையும் வங்கிக்கு உறுதி அளிக்கிறது.

இந்த சூழலில் எதிர்காலத்தில் எப்பொழுதாவது கடன் பெறுவதாக இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டுக் கடனை தவிர்த்து ஏதேனும் அதிக வட்டிக்கடன் இருந்தால் அதாவது தனி நபர் கடன் கார் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன் இருந்தால் முதலில் அதை செலுத்தி முடிக்க வேண்டும்.. அதன் பிறகு வீட்டு கடனை அடைக்கலாம். ஏனென்றால் வீட்டு கடனுக்கான வட்டி மற்ற எல்லா கடன்களையும் விட குறைவாக இருக்கும். வீட்டு கடனை முன்பே தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்துவது குறித்து முடிவு எடுப்பது நல்லது. இதன் மூலமாக பல லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.