
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு இடைவேளையின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பு என்ற விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒரு பாம்பு வகுப்பறைக்குள் நுழைந்ததால் மாணவர்கள் கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தனர். அப்போது ஒரு மாணவியை மட்டும் பாம்பு கடித்தது. உடனே ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தீமைப்பு வீரர்களும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற அந்த பாம்பை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.