கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரேயா என்ற ஒரு 19 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த நேரம் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் அவர்கள் திரும்பி வந்ததும் தங்கள் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி துடித்து அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரேயா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஸ்ரேயா இறப்பதற்கு முன்பாக எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது. அதில் என்னை கருப்பாக இருப்பதாக கூறி அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு விருப்பமில்லை எனை எழுதியிருந்தார். மேலும் இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.