தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள்  5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாதம்தோறும் ரேஷன் குறை தீர்ப்பு முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்துகொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பல கோரிக்கைகள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது. உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.