பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரேவண்ணா சிறப்பு விசாரணைக்கு குழு காவலில் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகள் சீராக இருப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.