
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நெல்சன் மனைவி மோனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் மோனிஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது கொலை வழக்கில் தொடர்புடைய சம்பவம் செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா ஆதரவு கொடுத்ததாக கூறி அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன்பின் அவருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மோனிஷா அக்கவுண்டில் இருந்து ரூ 75 லட்சம் பணம் டிரான்ஸ்பர் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்களாம். காவல்துறையினர் நேற்று அவரிடம் விசாரணை நடத்தியதில் தற்போது வங்கி கணக்கை ஆய்வு செய்து பணம் ட்ரான்ஸ்பர் ஆனது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மொட்டைகிருஷ்ணனுக்கு காவல்துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.