மகாராஷ்டிர மாநிலம் கல்யாணில், டாக்ஸி ஓட்டுநரிடம் ரூ.10,000 கேட்டு இரண்டு பெண்கள் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஓட்டுநர் பிவாண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பெண்கள் பணம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க மறுத்தால் துன்புறுத்தல் வழக்கில் சிக்க வைப்பதாக அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. நகர்ந்து கொண்டிருந்த டாக்ஸிக்குள் பெண்கள் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அவரைத் திட்டுவதாகக் கூறப்படும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. அவர்களில் ஒருவர் ஓட்டுநரை தாக்க முயன்றதாகவும் அந்த விடியோவில் தெரிகிறது. இதனால் வாகனத்திற்குள் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Viral incident from Kalyan Maharashtra: A taxi driver alleged that two women who took a lift from Kalyan to Bhiwandi threatened him with a false harassment case and demanded ₹10,000.
When he called for help the Thane Police intervened causing the women to panic and flee from… pic.twitter.com/QaAeV2wGGk
— Ramesh Tiwari (@rameshofficial0) August 14, 2026
இந்த நிலையில், ஓட்டுநர் போலீஸாரைத் தொடர்புகொண்டு, அருகிலுள்ள காவல் நிலையத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது வாகனத்தின் கதவைத் திறக்குமாறு சில குரல்கள் கேட்பதாகவும், ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் விடியோவில் பதிவாகியுள்ளது. போலீஸ் வாகனம் ஒன்று தென்பட்டதும், இரண்டு பெண்களும் நகர்ந்து கொண்டிருந்த டாக்ஸியில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். டாக்ஸி ஓட்டுநர் போலீஸாரை அணுகியதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
