கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சரத்குமார். 23 வயதான இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் வீடியோ எடுக்க பாதுகாப்பற்ற அருவிக்கு சென்றுள்ளார். ஆனால் கனமழை காரணமாக அருவியில் வெள்ளம்  ஆர்ப்பரித்து கொட்டிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சரத்குமார் திடீரென கீழே விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்த மீட்புக் குழு விரைந்து வந்து தேடியதில் சரத்குமாரை சடலமாக மீட்டுக் கொண்டு வந்தனர். வீடியோ எடுக்கும் மோகத்தில்  இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.