உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையா யாதவ் என்ற 41 வயது நபர் கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய இராணுவத்தில் சமையல் நிபுணராக பணியில் சேர்ந்தார். பின்னர் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த போரில் ராணுவ படையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன் மாதம் 17ஆம் தேதி கன்ஹையா போரில் நடந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஆறு மாதம் கழித்து கடந்த திங்கள்கிழமை அன்று கன்ஹையா சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவரது இறப்புக்கு ரஷ்ய அரசாங்கம் 30 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த பணமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கன்ஹையா மகன் அஜய் கூறியுள்ளார்.