தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், முதிய தம்பதியர் அச்சமயம் வந்த ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய முதிய தம்பதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதிர்ந்த வயதையும், நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாது. பெரும் விபத்தைத் தடுத்து நிறுத்திய சண்முகையா வடக்குத்தியாள் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.