தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கி வருகிறது. தற்போது இந்த ரயில்கள் செல்லும் மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை, மதுரை மற்றும் கொல்லம் ஆகிய ரயில்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் ரயில் பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும்.

இடையில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு 12.59 மணிக்கு வந்து சேரும். பிறகு சிவகாசி ரயில் நிலையத்திற்கு 1.48 நிமிடங்களுக்குள் சேரும். மதுரை ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு சென்றடையும். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை -கொல்லம் ரயில் செங்கோட்டையிலிருந்து 12.35 மணிக்கு கிளம்பி கொல்லம் ரயில் நிலையத்திற்கு மாலை 4.35 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.