
மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
முன்பதிவு இல்லா பெட்டிகளில் சோதனை நடத்திய போது யாரும் இல்லாமல் பைகள் மட்டும் தனியாக கிடந்தது. அந்த பைகைளை போலீசார் சோதனை செய்தபோது அதில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.அவற்றின் மொத்த எடை 8 கிலோ ஆகும்.இதுகுறித்து போலீசார் அருகில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது யாருடையது என்று தெரியவில்லை என கூறினர்.
எனவே அந்த போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அதனை தமிழ்நாடு போதை பொருள் புலனாய்வு காவல் பிரிவில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போதை பொருளை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.