
கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையை சேர்ந்த பாதிரியார் ஜாஜிஸ் என்பவர் பயணித்துள்ளார். இவர் காஞ்சங்காடு பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது பொதுப்பெட்டியில் பயணித்த 35 வயது பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் முறையிட அவர் சக பயணிகள் உதவியுடன் பாதிரியாரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜாஜிஸை கைது செய்தனர்.