தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் நடிகர்களிடம் முகத்தை விரும்புவதை விட கதாபாத்திரத்தையே விரும்புகிறார்கள் என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது, சினிமாவில் எனது ரசிகர்களும் அவர்கள் எனக்கு அளித்த பதவியும், நான் பெற்ற மரியாதையும் எனது மிகப்பெரிய சாதனையாகும். நான் உண்மையில் அதிஷ்டசாலி என்ற நயன்தாரா, தற்போது பெண்கள் பலதுறைகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.