
சென்ற 2021 ஆம் வருடம் ஜூலை மாதம் மாமல்லபுரம் அருகில் கார் விபத்தை ஏற்படுத்தியதாக யாஷிகா ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கோர விபத்தில் யாஷிகாவுடன் காரில் பயணம் மேற்கொண்ட அவருடைய தோழி வள்ளி என்பவர் உயிரிழந்தார்.
இதையடுத்து நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா ஆனந்த். மார்ச் 27-ம் தேதி ஆஜரான நிலையில், இன்று மீண்டும் நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் ஜூலை 27-ல் யாஷிகா ஆனந்த் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.