அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுடன் முன்னாள் முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TTV தினகரனின் அடையார் இல்லத்தில் வைத்து இச்சந்திப்பானது நடந்துள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்புக்கு அடுத்து, அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். இந்நிலையில் இருவரும் இணைந்து செயல்பட முடிவுசெய்திருப்பதாக கூறினர்.