நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் தேமுதிக சரிவில் இருந்து மீண்டு வருமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.