
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ₹200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 2,482 கிராம ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டங்களை அரசு செயல்படுத்தும்.
பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். என்றார்.