பணியில் இருந்து ஓய்வுபெறும் காலத்தில் மருத்துவச் செலவு திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு பயனடையும் விதமான இரட்டிப்பாகும் அருமையான அஞ்சலக திட்டம் ஒன்று உள்ளது. அஞ்சலகத் திட்டம் ஏராளமான சேமிப்பு திட்டங்களை வழங்கிவரும் நிலையில் ஓய்வு காலத்தில் 20 லட்சம் வரை லாபம் தரக்கூடிய கிராமப்புற அஞ்சலக காப்பீடு திட்டம் குறித்து அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் 19 முதல் 45 வயது உடையவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படலாம்.

இந்த திட்டத்தில் இணைந்த பிறகு வாடிக்கையாளர்கள் 15 அல்லது 20 வருட பாலிசி அடிப்படையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பாலிசி முடிவடைவதற்கு முன்பாகவே முதலீடு செய்த தொகை பெற விரும்பினால் 60 சதவீதம் தொகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40% தொகை முதிர்வு காலம் முடிவடைந்து பின்னரே வட்டியோடு சேர்த்து கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 20 வருடங்களுக்கு தினசரி ஆக 95 சேமித்தோம் என்றால் 20 வருடத்தின் நிறைவில் 3.7 2 லட்சம் பெற்றுக் கொள்ள முடியும்.