மேற்குவங்க முன்னாள் CM புத்ததேவ் பட்டாசார்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. CPM கட்சியை சேர்ந்த புத்ததேவ் 2000-2011 வரை மேற்குவங்க முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புத்ததேவ், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.