
அமெரிக்காவில் ஒரு தம்பதி தங்களுடைய குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஜான்சன் ரேமண்ட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது மகள் விமானத்தில் ஏறும்போது தவறி விழுந்ததாக கூறி அவர்கள் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் குழந்தை மெதுவாக சாப்பிட்ட காரணத்திற்காக பெற்றோர் அடித்துக் கொன்றுவிட்டு தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. மேலும் மற்ற குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தம்பதியினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.