
மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
திரு. துரைபாரதி அவர்கள் நக்கீரன் இதழில் முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழில் புலனாய்வு இதழியலின் முன்னோடியாக விளங்கியதோடு பல இளம் இதழியாளர்களை உருவாக்கியவர். வித்யாஷங்கர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி கவிஞராகவும் முத்திரை பதித்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து துடிப்போடு பணியாற்றி வந்த அவரது இழப்பு தமிழ் இதழியல் துறைக்கு பெரும் இழப்பாகும்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..
"மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார். pic.twitter.com/zNSf9nxrDK
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 12, 2023