தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் யசோதா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து குஷி என்ற படத்திலும் பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை சமந்தா சொந்தமாக பங்களா வீடு வைத்துள்ள நிலையில் தற்போது மும்பையிலும் 3 BHK வீட்டை வாங்கி விட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்த வீட்டின் விலை சுமார் 15 கோடி என்று கூறப்படுகிறது. நடிகை சமந்தா இனி பாலிவுட் சினிமாவிலும் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதால் தற்போது மும்பையில்  சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளார். மேலும் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை முடிவடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.