கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் ஜீவா மற்றொருவருடன் நடந்த வாக்குவாதத்தின் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக புளியங்குடியை சேர்ந்த நபர் ஜீவாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜீவாவின் உடல் விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.